சட்டசபை கூட்டம் தொடங்கியது: கருணாநிதி வந்தார்... சென்றார்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழக சட்டசபையின் குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. சமீபத்தில் மறைந்த தலைவர்களுக்குஅஞ்சலி செலுத்திய பின்னர் இன்றைய அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன.

இன்று காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்கியதும் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர்களான பி.டி. ஜாட்டிமற்றும் கிருஷ்ணகாந்த் ஆகியோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு இதற்கான தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

அதன் பின்னர் நாளை வரை தமிழக சட்டசபை ஒத்திவைக்கப்பட்டது.

இந்தக் கூட்டத் தொடர் ஒரு வார காலத்திற்கு நீடிக்கும் என்று தெரிகிறது.

கருணாநிதி வந்தார்... கையெழுத்திட்டார்... சென்றார்

முன்னதாக திமுக தலைவர் இன்று காலை சட்டசபைக்கு வந்தார். வந்தவுடன் அங்கிருந்த வருகைப் பதிவேட்டில்கையெழுத்து போட்டார்.

அதன் பிறகு சிறிது நேரம் சட்டசபையின் லாபியிலேயே உட்கார்ந்திருந்தார். பின்னர் கூட்டம் தொடங்குவதற்குமுன் வழக்கம் போல அதில் கலந்து கொள்ளாமலேயே சென்று விட்டார்.

இந்த சட்டசபையின் முதல் கூட்டத் தொடரிலும், பிறகு இன்னொரு கூட்டத் தொடரிலும் மட்டுமே கருணாநிதிகலந்து கொண்டார். அதுவும் இரு நாட்கள் மட்டுமே பங்கேற்றார்.

அதன் பிறகு சட்டசபைக் கூட்டங்களில் கலந்து கொள்வதைத் தொடர்ந்து தவிர்த்து வருகிறார்.

தக்க பாதுகாப்பு வழங்கப்படும், எந்தவித கசப்பான நிகழ்ச்சிக்கும் வாய்ப்பு தரப்படமாட்டாது என்று சபாநாயகர்காளிமுத்து பலமுறை கூறியும் கூட சபைக்கு வருவதை கருணாநிதி தவிர்த்து வருகிறார்.

தொடர்ந்து மூன்று கூட்டத் தொடர்களில் கலந்து கொள்ளாவிட்டால் எம்.எல்.ஏ. பதவி பறிபோய் விடும் என்ற விதிஇருப்பதால் அவ்வப்போது கருணாநிதி சட்டசபைக்கு வந்து கையெழுத்து மட்டும் போட்டு விட்டுச் செல்கிறார்என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+