பெங்களூரில் பதற்றம்: உஷார் நிலையில் போலீசார்
பெங்களூர்:
காவிரியில் நீர் விடுமாறு கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் பெங்களூரிலும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து பெங்களூரிலும் போலீசார் உஷார் நிலையில் இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் ரோந்தை அதிகமாக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. நிலைமையை ஆராயந்த பின்னர் அதற்கேற்பதமிழக- பெங்களூர் பஸ்கள் இயக்கப்படும் என்று தமிழக போக்குவரத்துக்குக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஏற்கனவே கடந்த 3 வாரங்களாக பெங்களூர் உள்பட கர்நாடகம் முழுவதும் தமிழக சேனல்களுக்கு கன்னட வெறியர்களால் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் கண்ணைக் கட்டிவிட்ட நிலையில் தமிழர்கள்உள்ளனர்.
தமிழ் சினிமாவுக்கும் தடை தொடர்கிறது. இந் நிலையில் கர்நாடகத்துக்கு எதிராகவும் தமிழகத்துக்கு ஆதரவாகவும் தீர்ப்புவந்துள்ளதால் பெங்களூரில் கொஞ்சம் கொஞ்சமாக பதற்றம் ஏற்பட ஆரம்பித்துவிட்டது.
தமிழ் சானல் ஒளிபரப்பு: நீதிமன்றம் தள்ளுபடி
இதற்கிடையே, நேற்று கர்நாடகத்தில் தமிழ் சேனல்களை ஒளிபரபப்பக் கோரி தமிழ் கிருஸ்துவ நலச் சங்கம் வழக்குத் தாக்கல்செய்துவிட்டு அதைத் திரும்பப் பெறுவதாக அறிவித்தது. இதையடுத்து அந்த மனுவை பெங்களூர் உயர் நீதிமன்றம் தள்ளுபடிசெய்தது.
கடந்த 5ம் தேதி முதல் கர்நாடகத்தில் நிறுத்தப்பட்டுள்ள தமிழ் சேனல்களை மீண்டும் ஒளிபரப்ப வேண்டும், தமிழ் படங்களைமீண்டும் திரையிட வேண்டும் என்று கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் இந்த மனுவை கிருஸ்துவ சங்கம் தாக்கல் செய்தது.
இந்த மனுவின் விசாரணை நேற்று எடுத்துக் கொள்ளப்பட்டது. ஆனால், அப்போது கிருஸ்துவ நலச் சங்கத்தின் சார்பில் ஆஜரானவழக்கறிஞர் இந்த மனுவை விசாரணைக்கு முன்பே தள்ளுபடி செய்துவிடும்படி கேட்டுக் கொண்டார்.
இதைத் தொடர்ந்து அந்த மனு தள்ளுபடி செய்யப்படுவதாக நீதிமன்றம் அறிவித்தது.
வழக்கை தாக்கல் செய்த அமைப்பு பதிவு செய்யப்பட்ட ஒன்றல்ல என்பதால் வழக்கு வாபஸ் பெறப்பட்டதாகத் தெரிகிறது.மீண்டும் இந்த வழக்கு விரைவில் தாக்கலாகலாம் என்று தெரிகிறது.
-->












Click it and Unblock the Notifications