For Daily Alerts
Just In
சிங்கப்பூர் மாரியம்மன் கோவிலில் தீ மிதி விழா
சிங்கப்பூர்:
சிங்கப்பூரில் உள்ள மாரியம்மன் கோவிலில் இன்று தீ மிதித் திருவிழா நடந்தது. இதில் சுமார் 3,000 தமிழர்கள் கலந்து கொண்டு தீமிதித்தனர்.
இன்று காலை 5.5 மீட்டர் நீளத்துக்கு நிலக்கரியை எரிய விட்டு உருவாக்கப்பட்டிருந்த தீயை இந்த பக்தர்கள் இறை கோஷத்துடன்கடந்து சென்றனர். மஞ்சள் தெளிக்கப்பட்ட உடைகளை அணிந்து மாலைகளுடன் பக்தி பரவசத்துடன் அவர்கள் இந்த நிகழ்ச்சியில்பங்கேற்றனர்.
பாலில் காலை நனைத்துவிட்டு தீயை பக்தர்கள் கடந்தனர். கோவிலின் தலைமை பூசாரி தான் தலையில் கும்பம் ஏந்திஅதிகாலையில் தீயைக் கடந்து விழாவைத் துவக்கி வைத்தார்.
-->
Comments
Story first published: Monday, October 28, 2002, 5:30 [IST]