டெல்லியில் அவசரமாய் தரையிறங்கிய சிங்கப்பூர்- லண்டன் விமானம்
டெல்லி:
சிங்கப்பூரில் இருந்து லண்டன் சென்று கொண்டிருந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் நேற்று நள்ளிரவு டெல்லி விமான நிலையத்தில்அவசரமாகக் தரையிறங்கியது.
இந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ்-061 விமானம் நள்ளிரவில் இந்தியாவின் மீது பறந்து கொண்டிருந்தபோது ஒரு சீட்டில் மர்ம பை கிடந்தது.இதையடுத்து அதில் வெடிகுண்டு இருக்கலாம் என்று கருதிய விமான சிப்பந்திகள் உடனே பைலட்களிடம் தெரிவித்தனர்.
இதையடுத்து இந்த விமானத்தை டெல்லியில் விமான நிலையத்தில் தரையிறக்க விமானிகள் அனுமதி கோரினர். இதைத் தொடர்ந்துஉடனடியாக அனுமதி தரப்பட்டது. ரன்வே அருகே தீயணைப்பு வண்டிகளும் ஆம்புலன்ஸ்களும் நிறுத்தப்பட்டனர்.
டெல்லி போலீசில் வெடிகுண்டு நிபுணர்களும் உடனடியாக விமான நிலையத்துக்கு விரைந்தனர். மிகவும் பரபரப்பான சூழ்நிலையில் இந்தவிமானம் நள்ளிரவு 1.57 மணிக்கு டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது.
தரையிறங்கியவுடன் பயணிகள் அவசரமாக இறக்கப்பட்டனர். இதையடுத்து அந்த விமானம் தனி பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டது.
டெல்லி போலீசாரும், விமான நிலையப் பாதுகாப்புப் படையினரும் விமானத்துக்குள் சென்று அந்தப் பையை விமானத்தில் இருந்துவெளியே கொண்டு வந்தனர்.
ஆனால், அந்தப் பையை சோதனையிட்டபோது அதில் டூத் பேஸ்ட், டூத் பிரஷ் மற்றும் சோப் இருந்தது. அது பிரிட்டிஷ் ஏர்வேஸ்நிறுவனத்துக்கு சொந்தமான டாய்லட் பேக் என்று தெரியவந்தது.
இருந்தாலும் தரையிறக்கப்பட்ட விமானம் முழுவதும் தீவிர சோதனை நடந்தது. பயணிகள் அனைவரும் 2 ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில்தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
வேறு விமான ஊழியர்களைக் கொண்டு இந்த விமானம் இன்று மாலை 4 மணிக்கு மேல் மீண்டும் தனது லண்டன் பயணத்தைத் தொடரும்என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-->