இந்திய ராணுவத்தின் அடுத்த தலைவராக என்.சி. விஜ் நியமனம்
டெல்லி:
இந்திய ராணுவத்தின் அடுத்த தலைவராக லெப்டினண்ட் ஜெனரல் நிர்மல் சந்த் விஜ் நியமிக்கப்பட உள்ளார்,
இப்போதைய தளபதியான ஜெனரல் பத்மநாபன் வரும் டிசம்பர் 31ம் தேதி ஓய்வு பெறுகிறார். இதையடுத்து லெப்டினண்ட் ஜெனரல் இப்பதவியில் அமர்த்தப்படுவார்.
ஜம்மூவைச் சேர்ந்த விஜ், டோக்ரா ரெஜிமெண்ட் எனப்படும் ராணுவப் பிரிவில் சேர்ந்து தனது சேவையைத் துவக்கியவர். கார்கில்போரின்போது இவர் ராணுவத்தின் ஆபரேசன்ஸ் பிரிவுக்கு டைரக்டர் ஜெனரலாக இருந்து பெரும் சேவையாற்றினார். இதனால் உத்தம் யுத்சேவா விருது பெற்றார்.
இவை தவிர பரம் விஷிஸ்ட் சேவா, அதி விஷிஸ்ட் சேவா விருதுகளையும் இவர் பெற்றுள்ளார்.
ராணுவத்தின் ஸ்ட்ரைக்கிங் கார்ப்ஸ் எனப்படும் தாக்குதல் படைக்கும், ஆண்டி-இன்சர்ஜென்சி எனப்படும் தீவிரவாதிகள் எதிர்ப்புப்படைக்கும் தலைவராக இருந்த ஒரே மூத்த அதிகாரி இவர் தான்.
கடந்த 40 ஆண்டுகளாக ராணுவத்தின் பல்வேறு துறைகளில் பணியாற்றிய பெருமை வாய்ந்தவர். 2000ம் ஆண்டில் இவர் தென் இந்தியராணுவப் பிரிவின் கமாண்டராக நியமிக்கப்பட்டார். குஜராத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது இவரது தலைமையில் தான் ராணுவம் மீட்புப்பணி நடந்தது.
பின்னர் கடந்த அக்டோபரின் ராணுவத்தின் துணைத் தலைவரானார்.
ஓய்வு பெற உள்ள ராணுவத் தளபதி பத்மநாபன் தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது.
-->












Click it and Unblock the Notifications