ராம.கோபாலனை கொலை செய்யத் திட்டம்: வாலிபர் கைது
திருநிெல்வேலி:
இந்து முன்னணி அமைப்பாளர் ராம.கோபாலனை கொலை செய்ய திட்டம் தீட்டியிருந்த நபரை போலீஸார் கைதுசெய்துள்ளனர்.
நெல்லை வட்டிக்கடை அதிபர் சண்முகப்பாண்டியன் என்பவரது கொலை வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள முக்கியக்குற்றவாளியான சையத் கம்மது அலி என்பவரை சமீபத்தில் போலீஸார் கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையின்போது ராம.கோபாலனை கொலை செய்யவும் அவர் திட்டம் தீட்டியிருந்ததுதெரிய வந்தது.
கடந்த மாதம் இந்து முன்னணி அமைப்பின் பொதுக்குழுக் கூட்டம் நெல்லையில் நடந்தது. இதில் ராம.கோபாலன்கலந்து கொண்டார். அப்போது அவரைக் கொலை செய்ய சையத் முகம்மது அலி திட்டமிட்டிருந்தார்.
ஸ்ரீபுரம் பகுதியில் ரிமோட் கண்ட்ரோல் வெடிகுண்டு மூலம் இந்தக் கொலையைச் செய்ய இவர் திட்டம்போட்டிருந்தார். ஆனால் போலீஸார் அதிக அளவில் இருந்ததாலும், பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகமாகஇருந்ததாலும், திட்டம் தோல்வியடைந்தாக போலீசாரிடம் அலி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications