ஹாங்காங்குக்கு கடத்தப்பட இருந்த 1,000 கடல் குதிரைகள்
சென்னை:
சென்னையில் இருந்து ஹாங்காங்கிற்கு கடத்தப்படவிருந்த 1,000 கடல் குதிரைகளை போலீஸார் மீட்டனர். இதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நவாப்ஜான் என்பவர் தான் வேலை பார்க்கும் நிறுவனத்தின் மேலதிகாரி நாகூர் என்பவரை சந்திக்க சென்னைவிமான நலையத்திற்கு சென்றிருந்தார். அப்போது நவாப்ஜானிடம், ஒரு பார்சலை கொடுத்து விட்டு நாகூர்விமானம் ஏறிச் சென்று விட்டார்.
அப்போது விமான நிலையத்தில் வழக்கமான சோதனையில் ஈடுபட்டிருந்த போலீஸார் நவாப்ஜானின் பார்சலைசோதித்தபோது அதில் கடல் குதிரைகள் இருந்தன.
இந்த கடல் குதிரைகளை ஹாங்காங்கிற்கு நாகூர் கடத்த முயன்றுள்ளார். ஆனால் போலீஸ் கெடுபிடி அதிமாகஇருந்ததாலும் விமான நிலையத்தில் சோதனைகள் தீவிரமாக இருந்ததாலும் அதை நவாப்ஜானிடம் கொடுத்து விட்டு தான்மட்டும் ஹாங்காங்குக்குத் தப்பிவிட்டார்.
அவரையும் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
-->












Click it and Unblock the Notifications