"தண்ணி" அடிக்க பணம் தராத பெண் எரித்து கொலை: கணவருக்கு 7 ஆண்டு சிறை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மது அருந்த மனைவி பணம் தராததால், அவரை மண்ணெண்ணை ஊற்றி எரித்துக் கொன்ற கணவருக்கு 7 ஆண்டுகடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
சென்னை அருகே உள்ள ஆவடியைச் சேர்ந்தவர் பச்சையப்பன். இவரது மனைவி சரளா.
கடந்த 1995ம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதி மது அருந்த மனைவியிடம் பணம் கேட்டார் பச்சையப்பன்.
ஆனால் சரளா கொடுக்க மறுக்கவே அவரை மண்ண்ெணை ஊற்றி தீவைத்துக் கொளுத்தினார் பச்சையப்பன். இதில்சரளா உடல் கருகி பரிதாபமாக பலியானார்.
இதையடுத்து பச்சையப்பன் கைது செய்யப்பட்டார். கீழ் கோர்ட்டில் அவருக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனைவிதிக்கப்பட்டது.
இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்தார் பச்சையப்பன். அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட தண்டனைஉறுதி செய்யப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டது.
-->












Click it and Unblock the Notifications