மிக் 21 விமானம் நொறுங்கி 2 பைலட்டுகள் பலி
பாக்தோக்ரா:
மேற்கு வங்காள மாநிலத்தில் மிக் 21 ரக போர் விமானம் ஒன்று இன்று காலை நொறுங்கி விழுந்ததில் அதிலிருந்த 2பைலட்டுகளும் பலியாகி விட்டனர்.
பயிற்சி விமானமான இது இன்று காலை 7.30 மணிக்கு வழக்கம் போல பயிற்சிக்காக கிளம்பிச் சென்றது.
வானில் சுமார் 20 நிமிடங்கள் வரை பறந்து கொண்டிருந்த இந்த விமானம் தரையிறங்கும் போது அதில் சிலதொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டதாகத் தெரிகிறது.
இதையடுத்து அவ்விமானத்திலிருந்த இரண்டு பைலட்டுகளும் பாராசூட் மூலம் தப்பிக்க முயற்சித்தனர்.
ஆனால் அதற்குள் விமானம் அருகில் உள்ள ஒரு தேயிலைத் தோட்டத்தில் விழுந்து சுக்கு நூறாக நொறுங்கிவிட்டது. இதில் அந்த இரு பைலட்டுகளுமே உயிரிழந்தனர்.
விபத்து நடந்த இடத்திற்கு விமானப் படை அதிகாரிகளும், போலீசாரும், மீட்புப் படையினரும் விரைந்து,அப்பகுதியைச் சுற்றி வளைத்துள்ளனர்.
சமீப காலத்தில் மிக் ரக விமானங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகி நொறுங்கி விழுவது தொடர்கதையாகி விட்டது.
-->