ஒரு நம்பர் லாட்டரிக்கு உயர் நீதிமன்றம் தடை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஒரு நம்பர் லாட்டரியை விற்பனை செய்வதற்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
சென்னை நகரில் சமீபத்தில் ஒரு நம்பர் லாட்டரி விற்கப்பட்ட இடங்களில் போலீஸார் அதிரடி சோதனை நடத்திகட்டுக்கட்டாக ஒரு நம்பர் லாட்டரிச் சீட்டுக்களைப் பறிமுதல் செய்தனர். இவற்றை விற்கவும் தடை விதித்தனர்.
இதை எதிர்த்து லாட்டரிக் கடைக்காரர்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதை விசாரித்த நீதிபதி பாலசுப்ரமணியம் தன் தீர்ப்பில் கூறுகையில்,
ஒரு நம்பர் லாட்டரியை விற்க தடை விதிக்கப்படுகிறது. இந்த லாட்டரிச் சீட்டுக்களை எங்கும் விற்கக் கூடாது.
அதே சமயத்தில் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு, முறையான அனுமதியுடன் நடத்தப்படும் பிற லாட்டரிச்சீட்டு விற்பனையை அரசும் காவல்துறையும் தடுக்கக் கூடாது என்று உத்தரவிட்டார்.
-->












Click it and Unblock the Notifications