For Daily Alerts
Just In
ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் பழ.நெடுமாறன் மனு
சென்னை:
பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறனும், அதன் பொதுச் செயலாளர் சுப. வீரபாண்டியனும் தங்களை ஜாமீனில் விடுதலை செய்யக் கோரிசென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசியதாகக் கூறி நெடுமாறன் மற்றும் வீரபாண்டியன் உள்ளிட்டோர் பொடாசட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 60 நாட்களுக்கும் மேலாக அவர்கள் சிறையில் உள்ளனர்.
இந்த நிலையில் தங்களை ஜாமீனில் விடுதலை செய்யக் கோரி நெடுமாறனும், வீரபாண்டியனும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதி தினகரன் மற்றும் நீதிபதி இப்ராகிம் ஆகியோர் முன்பாக வரும் 18ம் தேதிவிசாரணைக்கு வருகிறது.
-->
Comments
Story first published: Friday, November 15, 2002, 5:30 [IST]