மருத்துவமனையை ஆட்டிப்படைக்கும் பாம்பு படை
திருநெல்வேலி மாவட்டம் ஸ்ரீபுரம் கால்நடை மருத்துவமனையில் பாம்புகள் எண்ணிக்கை அதிகரித்து விட்டதால்அங்கு பாம்பாட்டிகளை வைத்து பாம்பு பிடிக்கும் பணியை மேற்கொண்டுள்ளது அரசு.
ஸ்ரீபுரம் பகுதியில் அரசு கால்நடை மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் புதர்கள் அதிக அளவில்உள்ளன. இதைத் தொடர்ந்து பாம்புகள் படையெடுக்க ஆரம்பித்தன.
ஒன்று, இரண்டாக உலவி வந்த பாம்புகள், நாளடைவில் படை படையாக வர ஆரம்பித்துவிட்டன. இதனால்மருத்துவமனைக்கு வரும் பிற மிருகங்கள் தலைதெறிக்க ஓடுகின்றன. கால்நடை மருத்துவமனை ஊழியர்களேஉள்ளே நுழைய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்ட பல கால்நடைகள் பாம்பு கடிக்கு பலியாகி வருகின்றன. இதைத்தொடர்ந்து போலீஸிலும் வனத்துறையினரிடமும் கால்நடைத்துறை புகார் தந்து உதவி கோரியுள்ளது.
இதையடுத்து பாம்பு வேட்டையில் இறங்கியுள்ளது வனத்துறையினர். கைதேர்ந்த பாம்பாட்டிகள் சிலரைப் "பிடித்து",அவர்களிடம் பாம்புகளைப் பிடிக்கும் பணி ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து மகுடிளுடன், கால்நடை வளாகத்திற்குள் நுழைந்துள்ள பாம்பாட்டிகள், பாம்பு வேட்டையைத்தொடங்கியுள்ளனர். இதுவரை 15 பெரிய பாம்புகளையும் நூற்றுக்கணக்கான சிறிய பாம்புகளையும்பிடித்துள்ளனர்.
அதற்கு மேல் அங்கு பாம்புகள் இல்லை என பாம்பாட்டிகள் தெரிவித்துள்ளனர். இருந்தாலும் அவ்வப்போது வந்துதேடுதல் வேட்டையைத் தொடருமாறு அவர்களுக்கு வனத்துறை கோரிக்கை விடுத்துள்ளது.
பிடிபட்ட பாம்புகளில் கருநாகம், கட்டுவிரியன், கண்ணாடி விரியன் மற்றும் நல்லபாம்பு போன்ற மிக பயங்கரவிஷம் கொண்ட பாம்புகள் இருந்தன.












Click it and Unblock the Notifications