நடுக்கடலில் இந்திய கேப்டனுக்கு கத்திக் குத்து
கொச்சி:
ஜப்பானியக் கப்பலில் நடுக்கடலில் கத்தியால் குத்தப்பட்ட இந்திய கேப்டனையும், இந்திய கப்பல் அதிகாரியையும் கடலோரக்காவல் படை மீட்டது.
ஜப்பானின் ஜேம்ஸ் ரிவர் பிரிட்ஜ் என்ற சரக்குக் கப்பல் எகிப்தில் இருந்து சிங்கப்பூருக்குக் சென்று கொண்டிருந்தது. கப்பலைஇந்தியரான கேப்டன் எச்.சிங் இயக்கிக் கொண்டிருந்தார். கப்பலின் தலைமை அதிகாரியான பிரதீப் குமாரும் இந்தியரே.
ஞாயிற்றுக்கிழமை இரவு நடுக்கடலில் கப்பலின் ஊழியர்களிடையே தகராறு ஏற்பட்டதாகத் தெரிகிறது. விவகாரம் முற்றியதில்கப்பலிலேயே கைகலப்பும் நடந்துள்ளது.
அப்போது கப்பலின் கேப்டன் சிங்கையும் பிரதீப் குமாரையும் கப்பலின் ஊழியர்களில் ஒருவரான ரேமண்ட் கத்தியால் குத்தினார்.ரேமண்ட் பில்ப்பைன்ஸைச் சேர்ந்தவர்.
கத்திக் குத்தில் பலத்த காயமடைந்த சிங்குக்கும் பிரதீர் குமாருக்கும் கப்பலியேயே முதலுதவி தரப்பட்டது. ஆனால், அவர்களதுநிலைமை கவலைக்கிடமானதையடுத்து அந்தக் கப்பலில் இருந்து அவசர உதவி கோரி ரேடியோ தகவல் பறந்தது.
இந்த ரேடியோ தகவலை லட்சத்தீவுகளில் உள்ள இந்தியக் கடற்படையின் கடலோரக் காவல் படை கேட்டது. இதையடுத்து அந்தக்கப்பலை லட்சத்தீவுகளை நோக்கி வருமாறு காவல் படை அழைத்தது. ஆனால், கேப்டன் இல்லாமல் அந்தக் கப்பலை இயக்கியஊழியர்களால் லட்சத்தீவுகள் நோக்கி கப்பலைச் செலுத்த முடியவில்லை.
அந்தக் கப்பல் தவறுதலாக கொச்சி கடல் பகுதியை நோக்கிச் சென்றது. இதையடுத்து இன்று காலை கொச்சியில் உள்ள கடலோரக்காவல் படையினர் கப்பலை அடைந்தனர்.
அங்கு மயங்கிக் கிடந்த சிங்கையும் பிரதீப் குமாரையும் மீட்டு கரைக்குக் கொண்டு வந்தனர். இருவரும் தனியார்மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
கேப்டன் சிங்குக்கு கன்னத்திலும் பிரதீப் குமாருக்கு நெஞ்சிலும் கத்திக் குத்து விழுந்துள்ளது. சிங் அம்ரிஸ்தரைச் சேர்ந்தவர்,குமார் டெல்லியைச் சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளது.
பனாமாவில் பதிவு செய்யப்பட்ட இந்தக் கப்பல் டோக்கியோவைச் சேர்ந்த கே ஷிப்பிங் லைன் நிறுவனத்துக்குச் சொந்தமானது.
இத் தகவல்களை கடலோக் காவல்படையின் கமாண்டன்ட் குருபிரசாத் சிங் தெரிவித்தார்.
-->












Click it and Unblock the Notifications