மும்பை ரயிலில் ரூ.25 லட்சம் மதிப்பு கடத்தல் பொருட்கள் பறிமுதல்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மும்பையிலிருந்து வந்த ரயிலில் கடத்தி வரப்பட்ட ரூ.25 லட்சம் மதிப்புள்ள எலக்ட்ரானிக் பொருட்கள் உள்ளிட்டகடத்தல் பொருட்களை ரயில்வே போலீஸார் பறிமுதல் செய்தனர்.
மும்பையிலிருந்து சென்னை வந்த மும்பை மெயில் ரயிலில் பார்சல் பெட்டியில் கடத்தல் பொருட்கள் வருவதாகரயில்வே பாதுகாப்பு போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்துசென்னை வந்த இந்த மெயிலில் போலீஸார் சோதனை போட்டபோது, மும்பையைச் சேர்ந்த தனியார்நிறுவனம் ஒன்றின் பெயரில் புக் செய்யப்பட்டிருந்த பார்சல் பெட்டியில் கடத்தல் பொருட்கள் இருந்தது தெரியவந்தது.
அவற்றின் மதிப்பு ரூ. 25 லட்சம் ஆகும். அவற்றைப் போலீசார் கைப்பற்றினர்.
இதுகுறித்து போலீஸார் மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-->












Click it and Unblock the Notifications