இந்தியாவின் முதல் குளோனிங் விலங்கு சென்னையில் தயாராகிறது
சென்னை:
தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்குகள் அறிவியல் பல்கலைக்கழகத்தில் ஆடு மற்றும் எருமை மாட்டின் குளோனிங் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இன்னும் ஒரு வருடத்தில் இந்தியாவின் முதல் குளோனிங் விலங்கு பிறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டாக்டர் லிஸ் சைமன் என்ற சென்னை கால்நடை மருத்தவக் கல்லூரியின் ஆராய்ச்சி மாணவி இந்த குளோனிங் ஆய்வில் ஈடுபட்டுள்ளார்.
ஒரு ஆடு மற்றும் எருமை மாட்டை தனது குளோனிங்கிற்காக எடுத்துக் கொண்டுள்ளார். இரண்டு விலங்குகளிலிருந்தும் செல் மாற்றம் கூட நடைபெற்றுவிட்டது.
விரைவில் இரு விலங்குகளில் ஒன்று கருத்தரிக்கலாம் என்று எதிர்பார்க்கிறார் டாக்டர் லிஸ்.
குளோனிங் செய்வதற்கு ஆடு மற்றும் எருமை மாட்டை தேர்ந்தெடுத்தற்கான காரணத்தையும் கூறுகிறார் டாக்டர் லிஸ்.
இந்த இரு விலங்குகளிலிருந்தும் ஏராளமான கரு முட்டைகள் கிடைக்கும். குளோனிங்கின்போது அதிக முட்டைகள் தேவைப்படும்.
இரு விலங்குகளும் தினசரி அதிக அளவில் கொல்லப்படுகின்றன. அப்படிக் கொல்லப்பட்ட விலங்குகளிலிருந்து கரு முட்டைகளை எடுப்பது எளிதான காரியம்.எனவேதான் ஆடு மற்றும் எருமை மாட்டைத் தேர்வு செய்ததாக கூறுகிறார் டாக்டர் லிஸ்.
ஆரம்ப கட்ட ஆய்வுப் பணிகளை முடித்து விட்ட டாக்டர் லிஸ், தற்போது விலங்குகள் கருத்தரிக்கும் நாளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்.
இந்தப் பணிக்காக ரூ.5 லட்சம் மதிப்புள்ள சில அதி நவீன கருவிகளும் வாங்கப்படவுள்ளன.
இந்தியா மற்றும் தமிழ்நாட்டின் முதலாவது குளோனிங் ஆராய்ச்சி இது என்பதால் இந்தப் பணிக்காக செலவு செய்யவிருப்பதாக பல்கலைக்கழக விலங்குகள்இனப்பெருக்கத் துறை தலைவர் டாக்டர் வீரபாண்டியன் தெரிவித்தார்.
போதுமான நிதியுதவி இல்லாத காரணத்தால்தான் இந்தியாவில் இதுபோன்ற ஆராய்ச்சிகள் நடைபெறுவதில்லை என்று பல்கலைக்கழக துணைவேந்தர்டாக்டர் கதிர்வேலு தெரிவித்தார்.
-->












Click it and Unblock the Notifications