For Daily Alerts
Just In
9ம் தேதி சென்னையில் கலெக்டர்கள், போலீ"ஸ் அதிகாரிகள் மாநாடு
சென்னை:
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்து விவாதிப்பதற்காக கலெக்டர்கள், மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர்கள் ஆகியோர் கலந்து கொள்ளும் மாநாடு வரும் 9ம் தேதி முதல் முதல்வர் ஜெயலலிதாதலைமையில் சென்னையில் நடைபெறுகிறது.
மூன்று நாட்களுக்கு இந்த மாநாடு நடக்கிறது. முதல் நாள் கலெக்டர்கள், காவல் துறை அதிகாரிகளின் கூட்டுக்கூட்டம் நடைபெறுகிறது. மாவட்ட நிர்வாகம் குறித்து அப்போது பேசப்படும்.
மறுநாளான 10ம் தேதி கலெக்டர்கள் மாநாடு நடைபெறும். இதில் வளர்ச்சித் திட்டங்களை அமல்படுத்துவதுதொடர்பாக விவாதிக்கப்படுகிறது.
கடைசி நாளான 11ம் தேதி காவல்துறை அதிகாரிகள் மாநாடு நடைபெறும். அப்போது சட்டம், ஒழுங்கு நிலைஉள்ளிட்ட காவல் துறை சம்பந்தப்பட்ட அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படும் என அரசின் செய்திக் குறிப்பில்தெரிவிக்கப்பட்டுள்ளது.
-->
Story first published: Sunday, December 1, 2002, 5:30 [IST]