14 தமிழ் மீனவர்கள் கைது: இலங்கை கடற்படை மீண்டும் அட்டகாசம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பாண்டிச்சேரி அருகே உள்ள ஜெகதாப்பட்டனம் பகுதியைச் சேர்ந்த 14 மீனவர்களை இலங்கை கடற்படை வீரர்கள்பிடித்துச் சென்று விட்டனர்.

தமிழகம் மற்றும் புதுவையைச் சேர்ந்த மீனவர்களை அடிக்கடி இலங்கைக் கடற்படையினர் பிடித்துச் சென்றுவிடுவது தொடர்கதையாகியுள்ளது.

முன்பெல்லாம் பிடிபட்டால் சுட்டுக் கொன்று விடுவார்கள். இப்போது பிடித்துச் சென்று சிறையில் அடைத்து பிறகுவெளியே விட்டு விடுகிறார்கள்.

இருப்பினும் இப்படி அடிக்கடி பிடித்துச் சென்று விடுவதால் மீனவர் குடும்பங்கள் எப்போது, என்ன நடக்குமோஎன்று பீதியிலேயே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

சமீபத்தில் நாகப்பட்டனத்தைச் சேர்ந்த 40 மீனவர்கள் சமீபத்தில் இலங்கை வீரர்களால் பிடித்துச் செல்லப்பட்டனர்.அவர்களது நிலை என்னவென்று இதுவரையிலும் தெரியவில்லை.

இந்த நிலையில் ஜெகதாப்பட்டனம் பகுதியிலிருந்து கடலுக்குள் சென்ற 14 பேரை இலங்கை கடற்படையினர்பிடித்துச் சென்று விட்டனர்.

ஜெகதாப்பட்டனத்தைச் சேர்ந்த மீனவர்கள் 37 படகுகளில் மீன் பிடிக்கச் சென்றனர். இலங்கை கடல் எல்லைப் பகுதிஅருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, நான்கு படகுகளில் இருந்த 14 மீனவர்களை இலங்கைக்கடற்படையினர் பிடித்துச் சென்றனர்.

இதையடுத்து தப்பி வந்த மற்ற மீனவர்கள் போலீஸில் புகார் கொடுத்தனர். பிடித்துச் செல்லப்பட்ட மீனவர்களைமீட்கும் பணி தொடங்கியுள்ளது.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+