"ஆட்சிக்கு வந்து மதமாற்ற தடை சட்டத்தை ரத்து செய்வோம்": கருணாநிதி
சென்னை:
திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கட்டாய மதமாற்றத் தடுப்புச் சட்டம், பஸ்கள் தனியார்மயம் ஆகியவை ரத்துசெய்யப்படும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.
இந்திய தேசிய லீக் கட்சியின் சார்பில் சென்னையில் நேற்று இப்தார் விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. கட்சித்தலைவர் சுலைமான் சேட் தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் கருணாநதி, தமிழக காங்கிரஸ் செயல் தலைவர்இளங்கோவன், கம்யூனிஸ்ட் தலைவர்கள் நல்லகண்ணு, சங்கரய்யா, வரதராஜன், விடுதலைச் சிறுத்தை அமைப்பின்தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் கருணாநிதி பேசுகையில்,
ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்கும் அரசு பஸ்கள் தனியார்மய கொள்கை குறித்த பயம்தொழிலாளர்களுக்கு வேண்டாம்.
கூடிய விரைவில் தனியார்மயமாக்கப்படும் அரசு பஸ்கள் மீண்டும் தேசியமயமாக்கப்படத்தான் போகிறது.
அதேபோல, கட்டாய மதமாற்றத் தடை சட்டத்தின் ஆபத்தை நாம் அனைவரும் உணர்ந்திருக்கிறோம். அந்த பயம்தேவையில்லை. கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம் வாலைச் சுருட்டிக் கொண்டு ஓடத்தான் போகிறது.
இவையெல்லாம் எங்கள் கையில் இல்லை. உங்கள் கையில் அதாவது தமிழக மக்களின் கையில்தான் உள்ளது.திமுக மீண்டும் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தால், உங்களால் கொண்டு வரப்பட்டால் இந்த கருப்புச் சட்டங்கள்நாட்டை விட்டு விரட்டப்படும் என்றார் கருணாநிதி.
-->












Click it and Unblock the Notifications