இந்து கைதிகளுக்கு சிறைகளில் பாரபட்சம்: ராம கோபாலன் புகார்
மதுரை:
சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ள இந்து கைதிகள் பாரபட்சமாக நடத்தப்படுகின்றனர் என்றும் இந்துசம்பிரதாயங்களைக் கடைப்பிடிக்க அவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை என்றும் இந்து முன்னணி அமைப்பாளர்ராம கோபாலன் குற்றம் சாட்டினார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ள இந்து கைதிகளுக்கு அவர்களது மத உரிமைகள் மறுக்கப்படுகின்றன.
ஆனால் பிற மதங்களைச் சேர்ந்த கைதிகள், அவர்களது மதங்களுக்குரிய கடமைகளை செய்யஅனுமதிக்கப்படுகிறார்கள்.
இந்த நிலை மாற வேண்டும். அனைத்து மதத்தினருக்கும் சம உரிமைகள் வழங்கப்பட வேண்டும்.
இல்லாவிட்டால் இந்தப் பிரச்சினை குறித்து அரசிடம் பேச்சு நடத்த இந்து முன்னணி தயங்காது.
மதுரை நிர்மலா மேல்நலைப் பள்ளியில் மாணவி ரேவதி என்பவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுவதுதொடர்பாக ஏராளமான சந்தேகங்கள் எழுந்துள்ளன. எனவே இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடத்தப்படவேண்டும் என்றார் ராம கோபாலன்.
-->