தேசிய நதிகள் இணைப்பு சாத்தியமல்ல: எம்.எஸ்.சுவாமிநாதன்
சென்னை:
கங்கை, பிரம்மபுத்திரா, சிந்து ஆகிய தேசிய நதிகளை இணைப்பது சாத்தியமல்லாத விஷயம் என்று பிரபலவேளாண் விஞ்ஞானி டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் கூறியுள்ளார்.
சென்னையில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்டு அவர் பேசுகையில்,
தேசிய அளவில் நதிகளை இணைப்பது என்பது மிகவும் கடினமான ஒன்று. கங்கை, பிரம்மபுத்திரா மற்றும் சிந்துநதிகள் சர்வதேச அளவில் சில நாடுகளால் பகிர்ந்து கொள்ளப்பட்டு வருகின்றன. எனவே அவற்றை இந்தியாவில்உள்ள காவிரி உள்ளிட்ட நதிகளுடன் இணைப்பது எளிதான காரியமல்ல.
ஆனால், இந்தியாவில் உற்பத்தியாகும் பிற நதிகளை இணைப்பது சாத்தியமான ஒன்றுதான். குறிப்பாக தென்னகநதிகளை இணைப்பது மிகவும் எளிது.
ஆட்சியாளர்கள் முழுமையாக முயற்சித்து நடவடிக்கை எடுத்தால் தென்னக நதிகளை இணைக்கும் திட்டம் வெகுஎளிதில் முடிவடையும். இதனால் தென் மாநிலங்களைச் சேர்ந்த அத்தனை விவசாயிகள் பெருமளவில்பயனடைவார்கள் என்றார் சுவாமிாதன்.
-->












Click it and Unblock the Notifications