மத நல்லிணக்கத்திற்காக பஸ் இழுத்த "பாட்ஷா"
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி கராத்தே வீரர் ஒருவர் முதுகில் கயிற்றைக் கட்டி 100 பேர்அமர்ந்திருந்த பஸ்சை இழுத்து சாதனை படைத்தார்.
தூத்துக்குடியைச் சேர்ந்த பாட்ஷா ஒரு கராத்தே மாஸ்டர். கராத்தே பள்ளி நடத்தி வருகிறார்.
மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி ரம்ஜான் மாதத்தில் சாதனை படைக்கத் திட்டமிட்ட பாட்ஷா, 100 பேர் அமர்ந்தபஸ்சை முதுகில் கயிறு கட்டி 100 மீட்டர் தூரம் வரை இழுத்து சாதனை படைத்தார்.
தேவராஜ் என்ற மற்றொரு கராத்தே வீரர் ஒருவர் வேன் நிறைய பயணிகளை ஏற்றி அதை தன் முதுகில் கயிற்றால்கட்டி இழுத்து சாதனை படைத்தார். மற்றொரு வீரர் தலை முடியில் அதே வேனைக் கட்டி இழுத்தார்.
நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கூடி நின்று இந்த சாதனைகளைக் கண்டு அதிசயித்து அந்த வீரர்களைப்பாராட்டினர்.
-->












Click it and Unblock the Notifications