மழை பெய்ய வேண்டி கழுதைகளுக்குத் திருமணம்
Subscribe to Oneindia Tamil
சேலம்:
சேலம் அருகே மழை பெய்ய வேண்டி ஆண் கழுதைக்கும், பெண் கழுதைக்கும் திருமணம் செய்து வைக்கப்பட்டது.
சேலம் அருகே உள்ளது பெத்தநாயக்கன் பாளையம். இப்பகுதியில் மழையே இல்லாமல் மக்கள் அவதிப்பட்டுவருகிறார்கள்.
இதையடுத்து வருண பகவானின் கருணையைப் பெறுவதற்காக கழுதைகளுக்குத் திருமணம் செய்து வைக்ககிராமத்தினர் முடிவெடுத்தனர்.
இதையடுத்து கருப்பன் என்ற ஆண் கழுதைக்கும், கருப்பாயி என்ற பெண் கழுதைக்கும் விமரிசையாக திருமணம்செய்து வைக்கப்பட்டது.
பின்னர் "மணமக்களுக்கு" பால், பழம் கொடுக்கப்பட்டன. அதன் பிறகு சம்பிரதாயப்படி "மணமக்கள்" இருவரும்தனியிடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இனிமேலாவது மழை வருகிறதா என்று பார்ப்போம் என நம்பிக்கையுடன் காத்துள்ளனர் பெத்தநாயக்கன்பாளையம் கிராமத்து மக்கள்.
-->












Click it and Unblock the Notifications