மதமாற்ற தடை சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல்
சென்னை:
சமீபத்தில் கொண்டுவரப்பட்ட கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத்திற்கு தமிழக ஆளுநர் ராமமோகன் ராவ் ஒப்புதல்அளித்தார்.
தமிழக அரசு கொண்டு வந்த இந்தச் சட்டத்தை இந்து அமைப்புகள் மற்றும் பா.ஜ.க. தவிர அனைத்துக் கட்சிகளும்,சிறுபான்மை மதத்தினரும், தலித்துகளும் கடுமையாக எதிர்த்தனர்.
கடந்த சட்டசபைத் தொடரில் நிறைவேற்றப்பட்ட இந்தச் சட்டத்தை வாபஸ் பெறக் கோரி பல்வேறுபோராட்டங்கள், மாநாடுகளும் கூட தமிழகத்தில் நடைபெற்றன.
பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ள இந்தச் சட்டத்திற்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் அளிக்கக் கூடாது என்று கோரிபல்வேறு கட்சிகளும், சிறுபான்மை மதத்தினரும், தலித்துகளும் அவரிடம் பலமுறை மனுக்களை கூட அளித்தன.
கடந்த திங்கள்கிழமை காலையில் கூட கிறிஸ்தவ அமைப்பினரும், விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பினரும்ஆளுநரைச் சந்தித்து, இது கருப்புச் சட்டம் என்பதால் இதற்கு ஒப்புதல் தரக் கூடாது என்று கோரிக்கை விடுத்தன.
ஆனால் அன்று மாலையிலேயே கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்து விட்டார்.இதைத் தொடர்ந்து நேற்று தமிழக அரசிதழிலும் அசாதாரண அறிவிப்பாக இதுகுறித்து வெளியிடப்பட்டது.
இதையடுத்து தமிழகத்தில் கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம் அமலுக்கு வந்து விட்டது.
தமிழ்நாடு கட்டாய மதமாற்றத் தடுப்புச் சட்டம்-2002 எனப்படும் இந்த சட்டத்தின்படி, ஒரு மதத்திலிருந்துஇன்னொரு மதத்திற்கு ஒருவரை கட்டாயப்படுத்தியோ, ஆசை வார்த்தை கூறியோ, பொருட்கள் தருவதாககூறியோ மாற்றினால் ரூ.50,000 வரை அபராதமும் 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் விதிக்கப்படும்.
மதமாற்றம் செய்யப்பட்டவர்கள் பெண்ணாகவோ, சிறுவயதினராகவோ அல்லது தாழ்த்தப்பட்ட, பழங்குடிஇனத்தைச் சேர்ந்தவர்களாகவோ இருந்தால் மதமாற்றம் செய்தவர்களுக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் ரூ.1லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும்.
-->












Click it and Unblock the Notifications