வயர்லெஸ் டவரில் தூக்கில் தொங்கிய பெண் குடும்பத்திற்கு நிதியுதவி
பரமக்குடி:
பரமக்குடி அருகே விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு, காவல் நிலைய வயர்லஸ் டவரில் பிணமாகதொங்கிய பெண்ணின் குடும்பத்துக்கு நிதியுதவி வழங்க அரசுக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக பரமக்குடிதுணை கலெக்டர் அஜீத் சட்டர்ஜி கூறினார்.
பரமக்குடி அருகே உள்ள காட்டுப் பரமக்குடி பகுதியைச் சேர்ந்த கருப்பாயி என்ற பெண், நகைத் திருட்டுதொடர்பாக காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.
ஆனால் அடுத்த நாள் காலையில் காவல் நிலையத்திற்கு வெளியே உள்ள வயர்லஸ் டவரின் பிணமாக அவர்தொங்கினார்.
இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பவத்தைத் தொடர்ந்து காவல் நிலையஇன்ஸ்பெக்டர் ஷாகுல் ஹமீது, சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசன், காவலர் ரங்காச்சாரி ஆகியோர் சஸ்பெண்ட்செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் கருப்பாயியின் குடும்பத்திற்கு நிவாரண உதவி வழங்குமாறு அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாகபரமக்குடி சப்-கலெக்டர் அஜீத் சட்டர்ஜி கூறினார்.
-->