ஜெயலலிதாவை எதிர்த்து திமுகவுடன் இணைந்து போராட்டம்: வைகோ அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

நாகப்பட்டிணம்:

தமிழகத்தில் அரசுப் போக்குவரத்துக் கழகத்தை தனியார்மயமாக்குவதை எதிர்த்து திமுகவுடன் இணைந்து போராட்டம் நடத்தப் போவதாகமதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

திமுகவில் இருந்து பிரிந்த பின்னர் இரு கட்சிகளும் இணைந்து நடத்தப் போகும் முதல் போராட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

மயிலாடுதுறையில் பல ஆண்டுகளுக்கு முன் நடந்த தேர்தல் மோதல் தொடர்பான வழக்கில் ஆஜராக இன்று வைகோ வேலூர் சிறையில்இருந்து நாகப்பட்டிணம் கூடுதல் அமர்வு நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டார்.

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை விசாரித்த நீதிபதி மீனாட்சிசுந்தரம் வழக்கை வரும் 26ம் தேதிக்கு ஒத்திவைத்தார். அன்றையதினம் வைகோ மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்.

நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு வெளியே வந்த வைகோ போலீஸ் வேனில் அமர்ந்தவண்ணம் நிருபர்களிடம் பேசினார். அப்போது அவர்கூறுகையில்,

தமிழகத்தில் ஏற்கனவே வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்து ஆடி வருகிறது. இந் நிலையில் அரசு போக்குவரத்துக் கழகத்தையும்தனியார்மயமாக்கிவிட்டு அதில் வேலை செய்பவர்களின் பிழைப்பிலும் மண்ணைப் போட தமிழக அரசு முயல்கிறது.

லாபத்தில் இயங்கும் வழித் தடங்களையும் தனியார்மயமாக்குவது ஏன்?

ஜெயலலிதா அரசின் இந்த அராஜகமான போக்கைக் கண்டித்து திமுகவுடன் இணைந்து மதிமுக போராட்டத்தில் குதிக்கும் என்றார் வைகோ.

வேலூர் சிறையில் வைகோவை திமுக தலைவர் கருணாநிதி சந்தித்துவிட்டுத் திரும்பியது முதல் இரு கட்சிகளுக்கும் இடையே புதியநட்புறவு உருவாகியுள்ளது.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+