பா.ம.க. தலைவர் ஜி.கே. மணிக்கு ஜாமீன் மறுப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ஜி.கே.மணிக்கு சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றம் ஜாமீன் அளிக்கமறுத்து விட்டது.
ஓய்வு பெற்ற நீதிபதி தங்கமணியைத் தாக்கிய வழக்கில் சரணடைந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜி.கே.மணிஉள்ளிட்ட 25 பேர் ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ராமலிங்கம், மனுதாரர்கள் அனைவரும் ஜாமீனில் விடுவதற்கு உரியவர்கள்அல்லர். இவர்களை வெளியே விட்டால், அது விசாரணைக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
மேலும் சிலர் இன்னும் கைது செய்யப்படாமல் உள்ளனர். எனவே ஜாமீன் தர முடியாது என்று கூறினார்.
நேற்று முன் தினம் தான் மணியுடன் சேர்ந்து தலைமறைவான பா.ம.க. எம்எல்ஏ காடுவெட்டி குருவும் மேலும் 4பேரும் சரணடைந்தனர்.
இந்த வழக்கில் இன்னும் 31 பா.ம.கவினரும் வன்னியர் சங்கத்தினரும் தொடர்ந்து தலைமறைவாகவே உள்ளனர்.
-->












Click it and Unblock the Notifications