வங்கக் கடலில் புயல் சின்னம்: தமிழகத்தில் மீண்டும் மழை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த மண்டலம் காரணமாக சென்னை உள்பட தமிழக கடலோரமாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு நல்ல மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆராய்ச்சி நிலையம்கூறியுள்ளது.
வங்கக் கடலில் தென் மேற்கு மற்றும் மேற்கு மத்தியப் பகுதியில் ஆந்திரா- தமிழ்நாட்டுக்கும் இடையே இந்தக்காற்றழுத்த மண்டலம் மையம் கொண்டுள்ளது.
இதனால் சென்னை, பாண்டிச்சேரி மற்றும் தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் அனைத்திலும் மழை பெய்யும்என்று நுங்கம்பாக்கம் வானொலி மையத்தின் நிபுணர் ராமநாதன் தெரிவித்தார்.
இதையடுத்து தமிழகத்தின் பல பகுதிகளிலும் நேற்று காலை முதலே மழை பெய்ய ஆரம்பிவிட்டது. அதிகபட்சமாகநாகப்பட்டனத்தில் 2 செமீ மழை பதிவாகியுள்ளது.
-->












Click it and Unblock the Notifications