நாகப்பா என்கெளன்டரில் இறக்கவில்லை: போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்
ராமபுரா: (கர்நாடகா)
தமிழக அதிரடிப்படையுடன் நடந்த என்கெளண்டரில் நாகப்பா இறக்கவில்லை என அவரது உடலில் நடந்த போஸ்ட் மார்ட்டம்மூலம் தெரியவந்துள்ளது.
அவர் மிக அருகில் இருந்து சுடப்பட்டிருக்கிறார். ஒரே ஒரு குண்டு தான் அவரது உடலில் பாய்ந்திருக்கிறது. இருதயத்தின் அருகே3, 4வது விலா எலும்புகளுக்கு இடையே தான் அந்த குண்டு பாயந்துள்ளது.
நின்ற நிலையில் அவர் சுடப்பட்டிருக்கிறார். இடது கையில் சிறிய காயம் தவிர அவரது உடலில் வேறு பெரிய காயங்களே இல்லை.என்கெளண்டரின்போது அவர் கொல்லப்பட்டதாகத் தெரியவில்லை என போஸ்ட் மார்ட்டம் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சாம்ராஜ்நகர் மாவட்டம் ராமபுரா ஆரம்ப சுகாதார நிலையத்தில் இந்த போஸ்ட் மார்ட்டம் நடந்தது. இந்த போஸ்ட் மார்ட்டம்அறிக்கை அரசிடம் சமர்பிக்கப்பட்டுவிட்டது. ஆனால், அதை அரசு இன்னும் வெளியிடவில்லை.
ஆனால், ஒரு தனியார் டிவியின் நிருபருக்கு இந்த போஸ்ட் மார்ட்டம் அறிக்கையின் நகல் கிடைத்துள்ளது. அதில் இத் தகவல்கள்கூறப்பட்டுள்ளன.
-->