For Daily Alerts
Just In
வழக்குப் பதிவு செய்வதில் சாதனை படைக்கும் கோவை போக்குவரத்து போலீஸ்
கோவை:
கோயம்பத்தூர் நகரில் இந்த ஆண்டு இதுவரை 50,000க்கும் மேற்பட்ட போக்குவரத்து வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக நகர காவல்துறை துணை கமிஷனர் சங்கரசுப்பு தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து விதி மீறல்களுக்காக ரூ. 39 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது என்றும் அவர் கூறினார். அடுத்தஆண்டை விபத்துக்கள் இல்லாத வருடமாக மாற்ற வாகன ஓட்டுநர்கள் உறுதி பூண வேண்டும் என்று கூறியசங்கரசுப்பு, போக்குவரத்து விதிகளை மதித்து அதன்படி வாகனங்களை ஓட்ட வேண்டும் என்று கோரிக்கைவிடுத்தார்.
வேகமாக வண்டி ஓட்டியதாக 1504 வழக்குகளும், குடித்து விட்டு வண்டி ஓட்டியதாக 619 வழக்குகளும்,ஆபத்தான முறையில் வண்டி ஓட்டியதாக 95 வழக்குகளும், பதிவு சான்றிதழ் இல்லாமல் வண்டிய ஓட்டியதாக 545வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன.
ஆட்டோக்கள் மீது மட்டும் 1021 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன என்றார் அவர்.
-->
Comments
Story first published: Thursday, December 19, 2002, 5:30 [IST]