அரசை கண்டித்து ஸ்டாலின் தலைமையில் 27ம் தேதி சென்னையில் திமுக போராட்டம்
சென்னை:
அதிமுக அரசைக் கண்டித்து திமுக சார்பில் வரும் 27ம் தேதி தமிழகம் முழுவதிலும் மாவட்ட, வட்டத் தலைநகரங்களில் நடைபெறவுள்ள கண்டனப் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்திற்குத் தலைமை தாங்குவோரின் பெயர்களை திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
சென்னையில் திமுக இளைஞரணிச் செயலாளர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்தப் போராட்டம் நடைபெறுகிறது. கட்சியின் பொதுச் செயலாளரான அன்பழகன் காஞ்சிபுரத்தில் நடக்கும் போராட்டத்திற்குத் தலைமை வகிக்கிறார்.
மதுரையில் முன்னாள் அமைச்சர் துரைமுருகனும், கோயம்புத்தூரில் முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசனும், திருச்சியில் முன்னாள் அமைச்சர் பொன். முத்துராமலிங்கம் போராட்டத்திற்குத் தலைமை வகிக்கிறார்கள்.
வேலூரில் திரைப்பட இயக்குநரும் நடிகருமான டி. ராஜேந்தர் தலைமையில் போராட்டம் நடக்கிறது.
வட்டத் தலைநகரங்களில் நடக்கும் போராட்டத்திற்குத் தலைமை தாங்குவோரின் பெயர்களை அந்தந்த மாவட்ட செயலாளர்கள் அறிவிப்பார்கள் என்று கட்சித் தலைமை அறிவித்துள்ளது.
-->












Click it and Unblock the Notifications