பெங்களூர்- ஹைதராபாத் எக்ஸ்பிரஸ் நேரம் மாற்றம்
பெங்களூர்:
ஹைதராபாத்தில் இருந்து பெங்களூர் வந்த கச்சிகுடா எக்ஸ்பிரஸ் விபத்தில் சிக்கியதால் இன்று மாலை 5 மணிக்கு பெங்களூரில்இருந்து ஹைதராபாத் செல்ல இருந்த ரயிலின் நேரம் மாற்றப்பட்டுள்ளது.
இந்த ரயில் இன்று இரவு 11.45 மணிக்குத் தான் பெங்களூரில் இருந்து புறப்படும்.
இதற்கிடையே விபத்தில் காயமடைந்தவர்கள் பல்வேறு பஸ்கள், வாகனங்கள், ரயில்கள் மூலம் பல்வேறு நகரமருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டு வருகின்றனர். சில பயணிகள் கே.கே. எக்ஸ்பிரஸ் மூலம் பெங்களூருக்குக்கொண்டு வரப்பட்டனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்தவுடன் அதிகாலையிலேயே பெங்களூர், ஹைதராபாத் உள்ளிட்ட ரயில் நிலையங்களில்நூற்றுக்கணக்கான மக்கள் குவிந்தனர். ரயிலில் வந்தவர்களின் உறவினர்கள் கண்களில் நீருடன் ரயில் நிலையங்களில் வந்துநின்றிருந்தனர். இவர்களில் சுமார் 200 பேரைக் கூட்டிக் கொண்டு ஒரு ரயில் பெங்களூர் ரயில் நிலையத்தில் இருந்து சம்பவஇடத்துக்கு விரைந்தது.
விபத்தில் சிக்கிய ரயிலில் இருந்த கூடுதல் மண்டல ரயில்வே மேலாளர் விஜய் அகர்வால் தான் உடனே தனது செல்போன் மூலம்அதிகாரிகளுக்கு விபத்து மூலம் தகவல் தந்தார், மீட்பு நடவடிக்கைகளையும் ஒருங்கிணைக்க உதவினார்.
-->












Click it and Unblock the Notifications