Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நான் பெண்ணல்ல, ஆண்: தென்காசி நீதிமன்றத்தில் வினோத வழக்கு

Subscribe to Oneindia Tamil

தென்காசி:

தென்காசி நீதிமன்றத்தல் ஒரு வித்தியாசமான மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் ஒரு இளம் பெண தன்னை ஆணாகஅறிவிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

17 வயதே ஆன உமா மகேஸ்வரி என்ற பெண் தான் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார். தனது பெயரையும் அவர் உமாமகேஸ்வரனாக மாற்றிக் கொண்டுள்ளார்.

நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:

நான் கொஞ்சம் கொஞ்சமாக ஆணாக மாறி வந்தேன். எனக்கு ஆண்பாலுக்கான உறுப்புக்கள் உருவாக ஆரம்பித்தன.இதையடுத்து ஒரு ஆபரேசனையும் செய்து முழு ஆணாக மாறிவிட்டேன். இதையடுத்து 1999ம் ஆண்டிலிருந்தே எனது பெயரைஉமா மகேஸ்வரன் என்று மாற்றிவிட்டேன்.

எனவே, நான் இனி பெண்ணில்லை. என்னை ஆணாகவே அங்கீகரிக்க வேண்டும். இதற்கான உத்தரவை நீதிமன்றம் அறிவிக்கவேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை தென்காசி முதன்மை துணை நீதிபதி நூர் முகம்மத் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டார். மேலும் அவருக்கு மருத்துவப்பரிசோதனைகள் நடத்தவும் உத்தரவிட்டார்.

இதையடுத்து அவருக்கு திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இந்த சோதனைகள் நடக்க உள்ளன. இதற்காகதிருநெல்வேலி செல்லுமாறு உமா மகேஸ்வரிக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

மருத்துவக் குழுவினரின் அறிக்கை வந்த பின்னர் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது.

முன்னதாக இந்த மனுவை உமா மகேஸ்வரி தென்காசி முன்சீப் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். ஆனால், மனுவை நீதிமன்றம்தள்ளுபடி செய்துவிட்டது. இதையடுத்து அவர் துணை நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

-->

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+