அமெரிக்க பறவைகள் மிஸ்ஸிங்: போலீஸில் புகார்!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை அருகே உள்ள வண்டலூர் வன விலங்குகள் சரணாலயத்தில் இருந்த 4 அமெரிக்க பறவைகளைக்காணவில்லை என்று போலீஸில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
வண்டலூர் பூங்காவுக்கு சமீபத்தில் தான் அமெரிக்காவிலிருந்து இந்த 4 பறவைகள் வரவழைக்கப்பட்டிருந்தன.ஒவ்வொரு பறவையின் விலையும் ரூ. 15,000 ஆகும்.
ஆனால், இந்தப் பறவைகளை நான்கு நாட்களாக காணவில்லை. இதையடுத்து ஓட்டேரி காவல் நிலையத்தில் புகார்கொடுக்கப்பட்டுள்ளது.
இதை சரணாயல ஊழியர்களில் சிலரே திருடி விற்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது. அல்லது இவர்களதுஉதவியுடன் பறவைகளை விற்கும் கும்பல் திருடியிருக்கலாம் என்று தெரிகிறது.
தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
-->












Click it and Unblock the Notifications