குஜராத் அனுபவத்தை நாடு முழுவதும் அமலாக்குவோம்: பா.ஜ.க.

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

குஜராத் தேர்தலில் இந்துத்துவாவுக்கு பெரும் வெற்றி கிடைத்ததால் இனி நாடு முழுவதும் இந்துத்துவாவையே பா.ஜ.க. முன்வைக்கும் என அக் கட்சியின் தலைவர் வெங்கைய்யா நாயுடு கூறினார்.

குரஜாத்தில் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் கீழ் மாபெரும் மதக் கலவரம் நடந்தது. சிறுபான்மையினர்ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டனர். லட்சகணக்கானவர்கள் வீடுகளை இழந்து முகாம்களில் வசிக்கின்றனர். ஆனால், இந்த மதக்கலவரத்தை முன் வைத்து போட்டியிட்டு நரேந்திர மோடி மீண்டும் வென்றார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் திமுக, தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் போன்ற மதசார்பற்ற கட்சிகள் இடம் பெற்றதால்தனது மதவாதத்தை ஒதுக்கிவிட்டு புதிய வேடம் பூண்டது பா.ஜ.க.

ஆனால், இப்போது மீண்டும் தன மதவாதத்தையே கையில் எடுக்கத் திட்டமிட்டுள்ளது. இன்று டெல்லியில் தொடங்கிய பா.ஜ.க.செயற்குழுக் கூட்டத்தில் இம் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அக் கட்சியின் தலைவர் வெங்கைய்யா நாயுடு கூறினார்.

ஆனால், இந்துத்துவாவை பா.ஜ.வை கையில் எடுத்தால் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகுவோம் என ஐக்கியஜனதா தளத் தலைவர் சரத் யாதவ் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தக் கருத்தை திமுக தலைவர் கருணாநிதியும்ஆதரித்துள்ளார்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+