சென்னையைக் கலக்கும் மூடு பனி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் கடந்த சில நாட்களாக கடுமையான மூடுபனி (fog) இருந்து வருகிறது.இதனால் காலை 8 மணி வரை வாகனங்கள் ஓட்டுவது, விமானங்களை இயக்குவது சிரமமாக உள்ளது.
மார்கழி மாதம்தொடங்கி நடுக்கமாக நகர்ந்து வருகிறது. இரவில் ஆரம்பித்து காலை 8 மணி வரை மூடுபனிபரவுகிறது.
இதனால் காலையில் வாகனங்களை ஓட்டுவது மிகவும் சிரமமாக உள்ளது. அத்தோடு விமானங்களைஇயக்குவதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது. தினசரி காலை 9 மணிக்கு மேல்தான் விமானங்கள் இயக்கப்படுவதாகமீனம்பாக்கம் வானிலை ஆராய்ச்சி நிலைய அதிகாரி நாயர் தெரிவித்துள்ளார்.
இந்த மூடுபனி, ஜனவரி மாதம் வரையிலும் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதற்குப் பிறகு வறுத்தெடுக்கப் போகும் வெயிலை நினைத்து, இந்தப் பனியை ரசித்து வருகின்றனர் சென்னைமக்கள்.












Click it and Unblock the Notifications