நெல்லை, தூத்துக்குடியில் மேலும் 8 இஸ்லாமிய பாதுகாப்புப் படை தீவிரவாதிகள் கைது

Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலி:

திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களின் சில பகுதிகளில் பதுங்கியிருந்த 8 இஸ்லாமிய தீவிரவாதிகளைசென்னை தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்கள் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

சமீபத்தில் தன் தமிழகத்தில் 11 இஸ்லாமிய பாதுகாப்புப் படைத் தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர். பாபர்மசூதி இடிப்பு தினத்தையொட்டி தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்த இவர்களது பிற கூட்டாளிகள்தலைமறைவாகிவிட்டனர்.

இவர்களைப் பிடிக்கத் தனிப் படைகள் அமைக்கப்பட்டிருந்தன. இந் நிலையில் இரு வாரங்களுக்கு முன் கைதானகாயல்பட்டனம் அரபிக் கல்லூரி முதல்வர் அமீத் பக்ரி கொடுத்த தகவலின் பேரில் சிவகங்கை மாவட்டத்தில்சபியுல்லா என்ற கண்ணன் நேற்று பிடிபட்டார்.

இவர் கொடுத்த தகவலின் மேலும் 7 பேர் பிடிபட்டுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டனத்தைச் சேர்ந்த முகம்மது சலீம், அப்துல் ரஹீம், சக்காரியா, முகம்மது ஹசன்மற்றும் நெல்லை மாவட்டம் கயத்தாறு பகுதியில் அலாவுதீன், ஷேக் அப்துல் காதர் மற்றும் ஹசன் ஆகிய 3 பேர்பிடிபட்டனர்.

இவர்கள் அனைவரும் செளதி அரேபியாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இஸ்லாமியபாதுகாப்புப் படை என்ற தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள்.

இவர்களுக்கு பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பான லஷ்கர்-ஏ-தொய்பா மற்றும் பாகிஸ்தான் உளவு அமைப்பானஐ.எஸ்.ஐ. ஆகிய அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

இவர்கள் தவிர மேலும் சில தீவிரவாதிகள் தலைமறைவாகவே உள்ளனர். அவர்கள் விரைவில் பிடிபடுவார்கள்என்றும் தனிப்படை போலீஸார் தெரிவித்துள்ளனர்.

-->Mail this to a friend  Post your feedback  Print this page 

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+