மெட்ரிக். பள்ளிகளின் கல்வித் தரம்: தமிழக அரசு ஆய்வு
சென்னை:
தமிழகத்தில் உள்ள 2,523 மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் கல்வித் தரம், போதனை முறை, பள்ளிகளின்அடிப்படைக் கட்டமைப்பு உள்ளிட்டவை குறித்து ஆய்வு நடத்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் சுமார் 9 லட்சம் பேர் படிக்கிறார்கள். இந்தப் பள்ளிகளில் ஆய்வுநடத்த அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக அரசு பிறப்பித்துள்ள உத்தரவில்,
தமிழகத்தில் உள்ள அனைத்து மெட்ரிகுலேஷன் பள்ளிகளிலும் வருடாந்திர ஆய்வு மேற்கொள்ளமெட்ரிகுலேஷன் பள்ளி இயக்குநரகத்திற்கு உத்தரவிடப்படுகிறது.
பள்ளிகளில் கல்வித்தரம், போதனை முறை, மாணவர்களின் வருகை, தேர்வுகள் நடத்தப்படும் விதம் உள்ளிட்டபல்வேறு அம்சங்கள் குறித்து ஆய்வின்போது கவனிக்கப்பட வேண்டும்.
ஆய்வு நடந்த ஒரு வாரத்திற்குள் அதுதொடர்பான அறிக்கை மெட்ரிக் பள்ளி இயக்குநரகத்திற்கு அனுப்பிவைக்கப்பட வேண்டும் என்று அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-->