For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உணவு, நீர், ஆக்சிஜனுடன் விண்வெளி நிலையம் சென்ற ரஷ்ய ராக்கெட்

By Staff
Google Oneindia Tamil News

பைகானுர் (கஸாகிஸ்தான்):

வானில் கட்டப்பட்டு வரும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியுள்ள 3 வீரர்களுக்குத் தேவையான உணவு, ஆக்சிஜன்,தண்ணீருடன் ஆளில்லா ரஷ்ய ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது.

அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகள் இணைந்து ஐ.எஸ்.எஸ். என்ற (இன்டர்நேசனல் ஸ்பேஸ் ஸ்டேசன்)விண்வெளி நிலையத்தை வானில் உருவாக்கி வருகின்றன. இதைக் கட்டுவதற்குத் தேவையான பொருள்களுடன் அவ்வப்போதுஅமெரிக்காவின் ஷட்டில் ராக்கெட்டுகள் விண்ணுக்குப் போய் வந்தன.

அவ்வப்போது புதிய வீரர்களை கட்டுமானப் பணியில் ஈடுபடுத்திவிட்டு, விண்வெளியில் இருக்கும் வீரர்களை பூமிக்குத் திரும்பஅழைத்து வந்தன. ஆனால், கொலம்பியா ராக்கெட் விபத்தையடுத்து இனி ஷட்டில் ராக்கெட்டுகள் ஏவுவதை அமெரிக்காகாலவரையின்றி ஒத்தி வைத்துவிட்டது.

இந் நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த பொவர்சாக்ஸ், பெட்டிட் மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்த புடாரின் ஆகிய வீரர்கள் இப்போதுவிண்வெளி நிலையத்தில் தங்கியுள்ளனர்.

இவர்களுக்குத் தேவையான நீர், உணவு, ஆக்சிஜனை ரஷ்ய ராக்கெட் கொண்டு சென்றுள்ளது. அமெரிக்க ராக்கெட் வெடித்துச்சிதறிய 24 மணி நேரத்துக்குள் ரஷ்யாவின் சோயுஸ் ராக்கெட் ஏவப்பட்டது. இது ஆளில்லா சரக்கு ராக்கெட் ஆகும்.

அடுத்த ஜூன் வரைக்கும் தேவைப்படும் அளவுக்கு உணவு, நீர், ஆக்சிஜன் ஐ.எஸ்.எஸ். விண்வெளி நிலையத்தில் இருப்பதாகவும்உடனடியாக ராக்கெட்டை ஏவ வேண்டியதில்லை எனவும் அமெரிக்கா கூறியது. ஆனால், ரஷ்ய தனது ராக்கெட்டைஅனுப்பிவிட்டது.

கஸாகிஸ்தானில் உள்ள பைகானுர் விண்வெளி மையத்தில் இருந்து இந்த ராக்கெட்டை சோயுஸ் ரஷ்யா செலுத்தியது. இப்போதுஇந்த சரக்கு ராக்கெட் விண்வெளி ஐ.எஸ்.எஸ். விண்வெளி நிலையத்தை அடைந்துள்ளது.

விண்வெளி நிலையத்தில் உள்ள வீரர்கள் விரும்பினால் இந்த சோயுஸ் ராக்கெட் மூலம் பூமிக்குத் திரும்பிவிடலாம். அதற்கானஅவசர லைப்போட் கலமும் இந்த ராக்கெட்டில் உள்ளது. அடுத்த சில மாதங்களில் 3 புதிய வீரர்களை விண்வெளி நிலையத்துக்குஅனுப்பவும் ரஷ்யா தயாராக உள்ளது.

இப்போதைக்கு அமெரிக்க ராக்கெட்டுகள் ஏதும் செலுத்தப்பட மாட்டாது என்பதால் ரஷ்யாவின் ராக்கெட்டுகளை நம்பித் தான்சர்வதேச விண்வெளி நிலைய வீரர்கள் உள்ளனர்.

கொலம்பியா ராக்கெட்டின் விபத்து குறித்து இப்போது விண்ணில் உள்ள 3 வீரர்களுக்கும் தெரிவிக்கப்பட்டது. இச் சம்பவம்தங்களை பெரும் மன வருத்தத்தில் ஆழ்த்தியிருப்பதாக 3 வீரர்களும் தெரிவித்துள்ளனர். கொலம்பியா ராக்கெட் வீரர்கள்விண்ணில் இருந்தபோது அவர்களுடன் இந்த 3 வீரர்களும் ஆன்-ஆர்பிட் வீடியோ கான்பரன்சிங் மூலம் பேசினர் என்பதுகுறிப்பிடத்தக்கது.

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X