For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வேலூரில் ரூ.134 கோடி நலப் பணிகள்: ஜெ. இன்று துவக்கி வைக்கிறார்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

வேலூரில் இன்று நடைபெறும் அரசு விழாவில் ரூ.134 கோடி மதிப்பிலான நலத் திட்டப் பணிகளைமுதல்வர்ஜெயலலிதா துவக்கி வைக்கிறார்.

வேலூர் அரசு முத்துரங்கம் கலைக் கல்லூரி மைதானத்தில் இதற்கான விழா இன்று பிற்பகல் நடைபெறுகிறது.இதற்காக சென்னையிலிருந்து சிறப்பு ஹெலிகாப்டரில் வேலூர் செல்கிறார் ஜெயலலிதா.

ரூ.65 கோடி செலவில் பல்வேறு அரசுத் துறை கட்டடங்களின் திறப்பு விழா, ரூ.62 கோடி செலவிலான பல்வேறுதிட்டப்பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா, ரூ.7 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாஆகியவற்றை ஜெயலலிதா துவக்கி வைக்கிறார்.

நிகழ்ச்சிக்கு சபாநாயகர் காளிமுத்து தலைமை தாங்குகிறார். மாவட்ட ஆட்சித் தலைவர் மோகன்தாஸ்வரவேற்கிறார். அமைச்சர்கள் செம்மலை, ஜெயக்குமார், வடிவேலு, பா. வளர்மதி மற்றும் வேலூர் மாவட்டஎம்.எல்.ஏ., எம்.பிக்கள் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

ஜெயலலிதா வருகையையொட்டி வேலூரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும், வரவேற்பு ஏற்பாடுகளும்செய்யப்பட்டுள்ளன.

uĀ gm] x: J : QҸ zv SŨlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X