குணமடைந்தார் நெடுமாறன்: மீண்டும் கடலூர் சிறையில் அடைப்பு
கடலூர்:
உடல் நலம் குறைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன்குணமடைந்ததைத் தொடர்ந்து, அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.
பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கடலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் நெடுமாறன். பல்வேறுவழக்குகள் தொடர்பாக திருச்செந்தூர், திண்டுக்கல், கொடைக்கானல் மற்றும் சென்னை ஆகிய இடங்களில் உள்ளநீதிமன்றங்களுக்கு மாற்றி மாற்றி அவர் அலைக்கழிக்கப்பட்டார்.
இதனால் அவர் உடல் நிலை பெரிதும் பாதிக்கப்பட்டது. கடந்த 4ம் தேதி அவருடைய உடல் நிலை மோசமாகவேசிறையிலேயே அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.
ஆனால் நெடுமாறனின் உடல் நிலை மேலும் மோசமாகவே அவர் அன்று பிற்பகல் கடலூர் அரசுமருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
நெடுமாறன் உடல் நிலை குறித்து மிகவும் கவலைப்பட்ட திமுக தலைவர் கருணாநிதி மற்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகியோர், இது தொடர்பாக தமிழக அரசைக் கடுமையாகக் கண்டிக்கவும் செய்தனர்.
இந்நிலையில் தீவிர சிகிச்சைக்குப் பின்னர் நெடுமாறன் நேற்று குணமடைந்தார். இதையடுத்து அவர் மீண்டும்கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
-->












Click it and Unblock the Notifications