இலங்கை செல்கிறார் இந்திய விமானப் படை தலைவர்
கொழும்பு:
இந்திய விமானப் படையின் தலைவர் ஏர் சீப் மார்ஷல் கிருஷ்ணசுவாமி வரும் புதன்கிழமை இலங்கை செல்கிறார்.
இலங்கை விமானப் படைத் தலைவரின் அழைப்பை ஏற்று அங்கு செல்லும் கிருஷ்ணசாமி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே,பாதுகாப்பு அமைச்சர், பாதுகாப்புத்துறைச் செயலாளர் ஆகியோரைச் சந்தித்துப் பேட்சு நடத்த உள்ளார்.
இலங்கையில் ராணுவ கேந்திரங்களையும் பார்வையிடும் அவர் 4 நாட்கள கொழும்பில் தங்கி இருப்பார்.
இலங்கை- விடுதலைப் புலிகள் இடையே அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்கிய பின்னர் அங்கு செல்லும் இந்தியாவின் மூத்தபாதுகாப்புத்துறை அதிகாரி இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா பயிற்சி:
இந் நிலையில் அணு, உயிரியல், ரசாயன ஆயுதத் தாக்குதலைச் சமாளிப்பது குறித்த சிறப்புப் பற்சியை இலங்கைராணுவத்தினருக்கு அமெரிக்கா அளிக்க ஆரம்பித்துள்ளது.
சுமார் 150 இலங்கை ராணுவத்தினருக்கு இப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications