சாலை வழியே நாடு திரும்புகின்றனர் வெளியேற்றப்பட்ட இந்திய, பாக் தூதர்கள்
டெல்லி:
இந்தியாவில் இருந்து வெளியேற்றப்பட்ட பாகிஸ்தான் தூதரும், பாகிஸ்தானில் இருந்து வெளியேற்றப்பட்ட இந்தியத் தூதரும்இன்று தங்களது நாடுகளுக்குத் திரும்புகின்றனர்.
காஷ்மீர் தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் தூதரகமே நேரடியாக நிதி உதவி செய்வதாகக் கூறி அதன் இந்தியத் தூதர பொறுப்புஅதிகாரி ஜலீல் அப்பாஸ் ஜிலானியை 48 மணி நேரத்தில் வெளியேற நேற்று முன் தினம் இந்தியா உத்தரவிட்டது.
மேலும் 4 பாகிஸ்தான் தூதரக ஊழியர்களையும் வெளியேற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதற்குப் பதிலடியாக இஸ்லாமாபாத்தில் உள்ள இந்தியத் தூதரக பொறுப்பு அதிகாரி சுதிர் வியாஸை பாகிஸ்தான் 48 மணிநேரத்தில் வெளியேற உத்தரவிட்டது. 4 அதிகாரிகளையும் வெளியேறச் சொன்னது.
இதையடுத்து இன்று இரு நாட்டுத் தூதரக அதிகாரிகளும் இந்தியா, பாகிஸ்தானில் இருந்து கார் மூலம் தங்களது நாடுகளுக்குப்புறப்பட்டனர். இவர்கள் பஞ்சாபில் உள்ள வாக் எல்லை வழியாக தங்களது நாடுகளை அடைவர்.
வெளியேற்றப்பட்ட ஒரு பாகிஸ்தான் தூதரக ஊழியர் இப்போது சவுதி அரேபியாவில் ஹஜ் பயணத்தில் உள்ளார். அவர் இனிஇந்தியா வர முடியாது. நேரடியாக அவர் பாகிஸ்தானுக்கே சென்று விடுவார். ஜீலானி கார் மூலம் புறப்பட்டாலும் மற்ற மூன்றுஊழியர்களும் ரயில் மூலம் பாகிஸ்தானுக்குப் புறப்பட்டனர்.
அதே நேரத்தில் இந்தியத் தூதரக அதிகாரி சுதிர் வியாசும், வெளியேற்றப்பட்ட மற்ற 4 ஊழியர்களும் கார் மூலம் டெல்லிபுறப்பட்டனர். இவர்கள் 12 மணி நேர பயணத்துக்குப் பின் இன்று இரவு டெல்லி வந்து சேருவர்.
சுதிர் வியாஸ் வெளியேற்றப்பட்டுவிட்டதால் விக்ரம் மிஸ்ரி தான் இனி இஸ்லாமாபாத்தில் இந்தியத் தூதரக பொறுப்புஅதிகாரியாக செயல்படுவார் என இந்திய வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.
இந்திய நாடாளுமன்றத்தின் மீது 2001ம் ஆண்டு தாக்குதல் நடந்தது முதல் இரு நாடுகளுமே தூதர்களை திரும்பஅழைத்துவிட்டன. இப்போது கீழ்நிலை அதிகாரிகள் தான் அந்தப் பொறுப்புகளில் உள்ளனர்.
நேபாளத்தில் பாக் தீவிரவாதம்:
இதற்கிடையே நேபாளத்தையும் இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதிகளைத் தயார் செய்யும் முகாமாத பாகிஸ்தான் பயன்படுத்திவருவதாக இந்தியா குற்றம் சாட்டியுள்ளது.
நேபாளத்திலும் பங்களாதேசிலும் பாகிஸ்தான் உளவுப் பிரிவான ஐ.எஸ்.ஐ. தீவிரவாதிகளுக்குப் பயிற்சி அளித்து வருவதாகஇந்தியா கூறியுள்ளது.
ஆனால், இதை பாகிஸ்தான் மறுத்துள்ளது.
அமெரிக்காவுக்கு வாஜ்பாய் சூடு:
தீவிரவாதம் குறித்த விவகாரத்தில் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து இரட்டை வேடம் போட்டு வருவதாகஇந்தியா குற்றம் சாட்டியுள்ளது.
இன்று நிருபர்களிடம் பேசிய பிரதமர் வாஜ்பாய்,
ஒசாமா பின் லேடனும் அவரது கும்பலும் இன்னொரு நாட்டை (ரஷ்யா) தாக்கினால் அது சுதந்திரப் போராட்டம். அதே நேரத்தில்வேறொரு நாட்டை (அமெரிக்கா) தாக்கினால் அவர்கள் தீவிரவாதிகள். இது என்ன நியாயம்?
தீவிரவாதம் குறித்த சில நாடுகள் போடும் இரட்டை வேடம் தான் தீவிரவாதிகளுக்கு பெரும் ஊக்கம் தந்து வருகிறது. அது தான்தீவிரவாதத்தையே வளர்த்து வருகிறது என்பதை சில நாடுகள் (அமெரிக்கா, பிரிட்டன்) உணர வேண்டும்.
சுதந்திர போராட்ட வீரர்கள் என்ற போர்வையில் தான் தீவிரவாதிகளுக்கு உதவியும் ஆயுதங்களும் தரப்பட்டு வருகின்றன.இதைத் தான் பாகிஸ்தான் செய்கிறது. ஆனால், இதை சில நாடுகள் (அமெரிக்கா) கண்டிக்கத் தயங்குகின்றன என்றார்.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications