For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரேஷன் கடைகளில் "சரக்கு" விற்க உயர் நீதிமன்றம் தடை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

ரேஷன் கடைகளில் மது பானங்களை விற்பனை செய்ய அனுமதிக்கக் கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

தமிழகம் முழுவதிலும் உள்ள 1,500 ரேஷன் கடைகளில் குறைந்த விலைக்கு மது பானங்களை விற்பதற்கு தமிழகஅரசு அனுமதி அளித்துள்ளதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின.

இதையடுத்து இதற்கு பல அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. பெண்கள் அதிகமாக வரும் ரேஷன்கடைகளில் மது பானங்களை விற்க அனுமதி தரக் கூடாது என்று அக்கட்சிகள் அரசுக்குக் கோரிக்கை விடுத்தன.

இந்நிலையில் அரசின் இந்த முடிவை எதிர்த்து சில்லரை மது பான விற்பனையாளர்கள் பொங்கி எழுந்தனர்.அவர்களில் சிலர் தமிழக அரசின் இந்த முடிவுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோரி உயர் நீதிமன்றத்தில்வழக்கு தொடர்ந்தனர்.

ரேஷன் கடைகளில் மது பானங்களை விற்க அனுமதித்தால், அது உரிமம் வாங்கி செயல்படும் தங்களுக்குப் பெரும்நஷ்டத்தை ஏற்படுத்தும் என்றும் எனவே அரசின் முடிவுக்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் அம்மனுவில்அவர்கள் கோரியிருந்தனர்.

இந்த மனுவை இன்று நீதிபதி மிஸ்ரா விசாரித்தார். இதையடுத்து அவர் தன் தீர்ப்பில், மதுபான விற்பனையில்தற்போது உள்ள நிலைய தொடர வேண்டும் என்றும் ரேஷன் கடைகளில் மதுபானங்களை விற்க தமிழக அரசுநடவடிக்கை எடுக்கக் கூடாது என்றும் உத்தரவிட்டார்.

மேலும் இந்த உத்தரவு இவ்வழக்கைத் தாக்கல் செய்த மனுதாரர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் கூறியநீதிபதி மிஸ்ரா, இதன் அடுத்தகட்ட விசாரணை வரும் 17ம் தேதி நடைபெறும் என்றும் தெரிவித்தார்.

uĀ gm] x: J : QҸ zv SŨlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X