சென்னையில் வேகமாகப் பரவும் அம்மை நோய்: டாக்டர்கள் எச்சரிக்கை
சென்னை:
சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் தட்டம்மை நோய் பரவி வருகிறது.
வடசென்னைப் பகுதியில் ஆரம்பித்த தட்டம்மை நோய் தற்போது சென்னை நகரின் பல்வேறுபகுதிகளுக்கும் பரவி வருகிறது.
காற்றின் மூலம் பரவும் இந்த அம்மை நோய்க்கு இதுவரை 200க்கும் மேற்பட்டவர்கள்பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
தாம்பரத்தில் உள்ள தொற்று நோய் தடுப்பு மருத்துவமனையில் மட்டும் 222 பேர் சிகிச்சை பெற்றுவருகிறார்கள். இது தவிர தனியார் மருத்தவமனைகளுக்கும் அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்கள்சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
கடந்த சில ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த முறை அம்மை நோய் பரவி வருவதாகவும்டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து டாக்டர் சி.டி. தங்கராஜ் கூறுகையில்,
அம்மை நோய் வந்தவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சரியானசிகிச்சை முறைகளை மேற்கொள்ள வேண்டும்.
நோய் தாக்கியவர்களைத் தனியிடத்தில் வைத்து பராமரிக்க வேண்டும். மற்றவர்களுடன் பழகஅனுமதிக்கக் கூடாது. இது ஒன்று மட்டுமே அம்மை நோயிலிருந்து தப்புவதற்கு சிறந்த வழியாகும்.
அம்மை நோய் தாக்கியவர்கள் வேப்பிலைப் படுக்கையில் படுப்பது, அம்மனுக்கு நேர்ந்துகொள்வது ஆகியவற்றின் மூலம் மட்டும் குணமாகிவிட மாட்டார்கள்.
அம்மை வைரஸின் வீரியத்தைக் குறைப்பதற்கு ஏராளமான மருந்துகள் உள்ளன. அவற்றைஎடுத்துக் கொண்டால்தான் நோயின் தீவிரம் குறையும் என்று டாக்டர் தங்கராஜ் கூறினார்.
-->












Click it and Unblock the Notifications