"திருட்டு வி.சி.டியை ஒழிக்க பொடா போன்ற சட்டம் தேவை"
சென்னை:
திருட்டு வி.சி.டிக்களை ஒழிக்க பொடா, தடா போன்ற கடுமையான சட்டம் தேவை என்று தமிழ்திரைப்பட தயாரிப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் சங்கத் தலைவர் முரளிதரன்தலைமையில் சென்னையில் நடந்தது. கூட்டத்திற்குப் பின் முரளிதரன், முன்னாள் தலைவர் கே. ராஜன்உள்ளிட்டோர் நிருபர்களுக்குப் பேட்டியளித்தனர்.
அப்போது முரளிதரன் கூறுகையில்,
இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் திருட்டு வி.சி.டி. புழக்கம் அதிக அளவில் உள்ளது. எனவேஇங்குதான் திருட்டு வி.சி.டிக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது.
பஸ்களில் வி.சி.டிக்கள் போடுவதை முதலில் தடை செய்ய வேண்டும். அதேபோல திருட்டுவி.சி.டிக்கள் விற்பது, விநியோகிப்பதைத் தடுக்க கடுமையான சட்டம் கொண்டுவரப்பட வேண்டும்.தடா, பொடா போன்ற மிகக் கடுமையான சட்டம் கொண்டு வந்தால் மட்டுமே திருட்டுவி.சி.டிக்களை ஒழிக்க முடியும்.
திருட்டு வி.சி.டி. விற்போர் மீது குண்டர் சட்டத்தைப் பிரயோகிக்க வேண்டும். கைது செய்யப்பட்டுநீதிமன்றத்திற்குக் கொண்டு செல்லப்படுவோர் ஜாமீனில் வெளிவர முடியாத அளவுக்குகடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்.
விரைவில் இது தொடர்பாகத் தமிழக டி.ஜி.பி. ராஜகோபாலனை சந்தித்துப் பேசவுள்ளோம் என்றார்அவர்.
-->