For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பான் பராக் மோகம்: ஆசிரியர் திட்டியதால் 2 மாணவர்கள் தற்கொலை

By Staff
Google Oneindia Tamil News

நாகர்கோவில்:

நாகர்கோவிலில் பான் பராக் உள்ளிட்ட போதைப் பொருட்களைச் சாப்பிட்டு வந்த 2 மாணவர்களைஆசிரியர் கண்டித்ததால், அந்த மாணவர்கள் அரளி விதையைத் தின்று தற்கொலை செய்துகொண்டனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள பார்வதிபுரம் இலந்தையடிவிளையைச் சேர்ந்தஅஜின் மற்றும் சிவக்குமார் ஆகிய மாணவர்கள் பெருவிளை அரசு உயர்நிலைப் பள்ளியில் 9ம்வகுப்பு படித்து வந்தனர்.

அஜினுக்கும் சிவக்குமாருக்கும் பான் பராக், ஜர்தா பீடா ஆகிய போதைப் பழக்கங்கள் இருந்துவந்தன.

அவர்கள் தொடர்ந்து போதைப் பாக்குகளைச் சாப்பிட்டு விட்டு வகுப்புகளுக்கும் வரத்தொடங்கியதால் அவர்களுடைய ஆசிரியர் கடும் கோபமடைந்து இருவரையும் நன்றாகத்திட்டியுள்ளார்.

இதனால் மிகவும் வெறுத்துப் போன அஜினும், சிவக்குமாரும் நேற்று அரளி விதையை நன்றாகஅரைத்துத் தின்று விட்டனர்.

இதையடுத்து அவர்கள் இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஆனால் சிகிச்சைபலனளிக்காமல் இரு மாணவர்களும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஆசிரியர்கள் திட்டியதால் இரண்டு மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது நாகர்கோவிலில்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

uĀ gm] x: J : QҸ zv SŨlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X