அமெரிக்காவைக் கலக்கும் பண்டிட் ரவிசங்கரின் மகள்
நியூயார்க்:
சிதார் இசைக் கலைஞர் பண்டிட் ரவி சங்கரின் மகளான நோரா ஜோன்ஸ் அமெரிக்காவின் மிக உயரிய இசைவிருதான கிராமி விருதுகளை வென்றுள்ளார். மொத்தம் 5 கிராமி விருதுகளை அவர் வென்றார்.
கம் அவே வித் மி என்ற ஆல்பத்துக்காக அவருக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. இதுவரை இந்தஆல்பத்தின் 60 லட்சம் சிடிக்கள் விற்றுத் தீர்ந்துள்ளன.
சிறந்த அறிமுகக் கலைஞர், சிறந்த சாதனையாளர், சிறந்த பாடல், சிறந்த பெண் பாப் பாடகி ஆகியவற்றுக்கானகிராமி விருதுகளையும் இவர் வென்றுள்ளார்.
நேற்றிரவு நியூயார்க்கின் மடிசன் சதுக்கத்தில் நடந்த விழாவில் நேரா ஜோன்சுக்கு இந்த விருதுரள் வழங்கப்பட்டன.தான் ஆனந்த பரவசம் அடைவதாகவும், எனது தாய்க்கு நன்றி என்றும் விருது வாங்கிய பின் நேரா கூறினார்.தனது தந்தை பற்றி அவர் ஏதும் குறிப்பிடவேயில்லை.
பண்டின் ரவிசங்கரின் அமெரிக்க மனைவியான சுஜோன்சின் மகள் தான் நோரா. நோரா பிறப்பதற்கு முன்பேரவிசங்கரும் சுஜோன்சும் பிரிந்துவிட்டனர். இவர்கள் இருவரும் முறைப்படி திருமணமும் செய்துகொள்ளவில்லைஎன்பதும் குறிப்பிடத்தக்கது.
தனது 9 வயதில் தான் தந்தை ரவிசங்கரை இவர் சந்தித்தார். ரவிசங்கர் இதுவரை பெண்களுடன் வசித்துள்ளதார்.
ரவிசங்கரின் இன்னொரு மனைவிக்குப் பிறந்த அனுஸ்காவும் கிராமி விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டிருந்தார்.ஆனால், அவருக்கு விருது கிடைக்கவில்லை. ரவிசங்கரும் 3 முறை கிராமி விருதை வென்றவர் தான் என்பதுகுறிப்பிடத்தக்கது.
-->