மத்திய பட்ஜெட் இன்று தாக்கல்
டெல்லி:
2003-04ம் ஆண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. நிதிஅமைச்சராக ஜஸ்வந்த் சிங் பொறுப்பேற்ற பின் அவர் தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட் இது.
ஒரு சாதாரண மனிதனின் பாக்கெட்டில் அதிகமான பணம் இருக்கும் வகையிலும், அவனுடையமனைவியின் கையிலும் போதுமான அளவுக்கு பணம் புழங்கும் வகையிலும் இந்த பட்ஜெட்இருக்கும் என்று ஏற்கனவே சிங் தெரிவித்துள்ளார்.
அதன்படி இந்த ஆண்டு பட்ஜெட் பொதுமக்களைப் பாதிக்காத அளவில் இருக்கும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயத்தில் வரி செலுத்துவோரின் எண்ணிக்கை அடுத்த நிதி ஆண்டில்அதிகரிக்கும் வகையில் பட்ஜெட் அமையும் என்றும் தெரிகிறது.
மேலும் மறைமுக வரிகள் சீரமைப்பு தொடர்பாக விஜய் கேல்கர் அளித்த பரிந்துரைகள் இந்தபட்ஜெட்டில் அமலாக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இந்த பட்ஜெட் 8 சதவீத பொருளாதாரவளர்ச்சிக்கு இந்தியாவைக் கொண்டு செல்லும் என்றும் தெரிகிறது.
அரசின் செலவுகளும் மானியங்களும் கட்டுப்படுத்தும் அறிவுப்புகளை சிங் வெளியிடுவார் எனத்தெரிகிறது. நுகர்வோர் பொருள்கள், மோட்டார் வாகனங்கள் ஆகியவற்றின் மீதான உற்பத்திவரியில் 4 சதவீதம் வரை குறையும் என்றும் தெரிகிறது. இதனால் அவற்றின் விலை குறைவதற்கானவாய்ப்புக்கள் அதிகம் உள்ளன.
பட்ஜெட்டுக்கு முந்தைய பொருளாதார ஆய்வறிக்கையில் இந்தத் தகவல்கள்தெரிவிக்கப்பட்டுள்ளதால் இந்த பட்ஜெட் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
-->