பிலிப்பைன்ஸில் பயங்கர குண்டு வெடிப்பு: 18 பேர் பலி
தாவோ:
பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள தாவோ விமான நிலையத்தில் நடந்த பயங்கர குண்டு வெடிப்புசம்பவத்தில் 18 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும் 80 பேர் படுகாயமடைந்தனர்.
தெற்கு பிலிப்பைன்ஸில் உள்ள தாவோ நகரில் உள்ள விமான நிலையத்தில் இன்று காலை 10.45மணிக்கு (இந்திய நேரப்படி) மணிலாவுக்கு செல்லும் 2 விமானங்களில் ஏறுவதற்காக நீளமானவரிசையில் பயணிகள் நின்று கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த சக்தி வாய்ந்த வெடிகுண்டு ஒன்று வெடித்துச்சிதறியது. இந்தப் பயங்கர குண்டு வெடிப்பில் 18 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். இறந்தவர்களில்பெரும்பாலானவர்கள் குழந்தைகள் என்று தெரிய வந்துள்ளது.
மேலும் 80 பேருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் உடனடியாக மருத்துவமனைகளுக்குக்கொண்டு செல்லப்பட்டனர்.
இதையடுத்து விமான நிலையத்தை ராணுவ அதிகாரிகளும், போலீசாரும் சுற்றி வளைத்தனர்.
-->












Click it and Unblock the Notifications