ஒரு வழியாக அங்கீகாரம் பெற்றது மூகாம்பிகை கல்லூரி
சென்னை:
மாணவ, மாணவிகளின் போராட்டங்களுக்கு மத்தியில் தங்கள் கல்லூரிக்கு மத்திய அரசுஅங்கீகாரம் அளித்துள்ளதாக தாய் மூகாம்பிகை பல் மருத்துவக் கல்லூரி நிர்வாகம்தெரிவித்துள்ளது.
சென்னையை அடுத்த முகப்பேறு பகுதியில் உள்ளது தாய் மூகாம்பிகை பல் மருத்தவக் கல்லூரி.
இக்கல்லூரி தொடங்கப்பட்டு பல ஆண்டுகள் ஆன பிறகும் கூட அதற்கு உரிய அங்கீகாரம்கிடைக்கவில்லை என்று கூறி கடந்த சில மாதங்களாக அதன் மாணவ, மாணவிகள் பல்வேறுபோராட்டங்களை நடத்தி வந்தனர்.
அதிலும் குறிப்பாக கடந்த சில நாட்களாக மாணவ, மாணவிகளுடன் அவர்களுடையபெற்றோர்களும் சேர்ந்து கொண்டு கல்லூரிக்குள் சென்று அதன் முதல்வரின் அறையைமுற்றுகையிட்டு, உள்ளிருப்புப் போராட்டமும் நடத்தினர்.
உரிய அங்கீகாரம் கிடைக்காததால் மூன்று ஆண்டுகளுக்கு முன்பே படிப்பை முடித்த சுமார் 100மாணவ, மாணவிகள் இன்னும் டிகிரி கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சகம் தங்கள் கல்லூரிக்குஅங்கீகாரம் அளித்துள்ளதாக தாய் மூகாம்பிகை பல் மருத்துவக் கல்லூரி நிர்வாகம் நேற்றுஅறிவித்தது.
இதையடுத்து இங்கு பல் மருத்துவம் முடித்த மாணவ, மாணவிகளுக்கு விரைவில் பட்டம் கிடைக்கும்என்று தெரிகிறது. அவர்கள் தங்களுடைய போராட்டத்தையும் முடிவுக்குக் கொண்டு வந்துள்ளனர்.
-->